Archives: ஜூலை 2017

மன்னிக்கப்பட்டாய் விட்டது

எனது சினேகிதன் நார்ம் குக் வேலை முடிந்து வீடு திரும்பும்பொழுது, சில சமயங்களில் அவனது குடும்பத்தாருக்கு எதிர்பாராத ஆச்சரியத்தைக் கொடுப்பான். அவன் முன் வாசல் வழியாக நுழையும் பொழுது “நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள்” என்று உரத்தக்குரலில் சொல்லுவான். அவனது குடும்பத்தார் அவனுக்கு ஏதோ தீங்கு விளைவித்து, அதற்கான மன்னிப்பை அவனிடம் பெற வேண்டும் என்று அர்த்தமில்லை. அந்த நாள் முழுவதும் அவர்களை அறியாமலேயே அநேகப் பாவங்கள் செய்திருந்தாலும், தேவனுடைய கிருபையால் முற்றிலும் மன்னிக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர்களுக்கு அவன் ஞாபகப்படுத்தினான். “அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:7-9) என்று தேவனின் கிருபையைப் பற்றி யோவான் இந்த வசனங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஒளியில் நடப்பது என்பது இயேசுவைப் பின்பற்றுவதின் உருவகமாகும். தேவனுடைய ஆவியானவரால் இயேசுவைப்போல நடப்பது நாம் அப்போஸ்தலரோடு விசுவாசத்தின் ஐக்கியத்தில் இணைந்துவிட்டோம் என்பதற்கு அடையாளம் என்று யோவான் குறிப்பிட்டுக் கூறுகிறார். நாம் உண்மையான கிறிஸ்தவர்கள்தாம்; ஆனால் சில நேரங்களில் நாம் தவறானவற்றைத் தேர்ந்தெடுத்துவிடுவோம். ஆகவே நாம் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்றும் கூறுகிறார். ஆயினும் தேவ கிருபை நமக்கு அளவில்லாமல் அருளப்பட்டுள்ளது. நமக்கு தேவையான மன்னிப்பைப் பெறலாம்.

நாம் பாவமில்லாத பரிபூரணமானவர்கள் அல்ல ஆனால், இயேசுவால் மன்னிக்கப்பட்டவர்கள். அதுவே இன்றைக்குரிய நற்செய்தியாகும்.

இனிமையான தோழமை

முதியோருக்கான ஒரு சிறிய மருத்துவமனையிலிருந்த வயது சென்ற அந்தப் பெண், யாருடனும் பேசுவதுமில்லை, தனக்குக் தேவையான எதையும் கேட்டதுமில்லை. ‘கிரீச்’ என்று ஒலி எழுப்பக்கூடிய அவளது பழமையான அசைந்தாடும் நாற்காலியில் அமர்ந்து ஆடிக் கொண்டே தன் நேரத்தை கழிப்பாள். அவளைப் பார்க்க அதிக பார்வையாளர்களும் வர மாட்டார்கள். ஆகவே ஒரு இளம் தாதிப் பெண், அவளுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்திலெல்லாம் அந்தப் பெண்ணின் அறைக்குச் செல்வாள். அந்த வயது சென்ற பெண்ணிடம் கேள்விகள் கேட்டு அவளை பேச வைக்கவேண்டும் என்று முயற்சிக்காமல், அவளும் ஒரு அசைந்தாடும் நாற்காலியை அவள் அருகில் இழுத்துப்போட்டு, அந்தப் பெண்ணோடு இணைந்து ஆடுவாள். அநேக மாதங்களுக்குப் பின் அந்த வயதானப் பெண் “என்னோடுகூட சேர்ந்து நீ அசைந்தாடுவதற்கு நன்றி” என்று கூறினாள். அந்த இளம் தாதிப் பெண் அவளோடு கூட அமைதியாக நேரத்தைச் செலவிட்டு நட்புறவை பகிர்ந்து கொண்டதற்கு அவள் நன்றியோடிருந்தாள்.

இயேசு பரலோகத்திற்கு போகும்முன்பு அவருடைய சீஷர்களோடு என்றென்றும் இருக்கத்தக்கதாக ஒரு தேற்றரவாளனை அவர்களுக்கு அனுப்புவதாக அவர் வாக்குப்பண்ணினார். அவர் அவர்களை திக்கற்றோர்களாக விடப் போவதில்லை என்றும் அவர்களுக்குள்ளே என்றென்றும் வாசம் பண்ணத்தக்கதாக பரிசுத்த ஆவியை அனுப்பப்போவதாக வாக்குப் பண்ணினார் (யோவா. 14:17). இயேசுவை விசுவாசிக்கும் இன்றைய விசுவாசிகளுக்கும் அந்த வாக்குத்தத்தம் உண்மையாகவே உள்ளது. திரியேக தேவனாகிய அவர் நம்மில் வாசம் பண்ணுவதாக இயேசு கூறினார் (வச. 23).

நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு நெருக்கமான, உண்மையான, தோழராக கர்த்தர் இருக்கிறார். நமது போராட்டங்களில் அவர் நம்மை வழி நடத்தி நமது பாவங்களை மன்னித்து, நமது அமைதியான ஜெபங்களைக் கேட்டு நம்மால் சுமக்க இயலாத பாரங்களை அவரது தோள்களில் சுமப்பார்.

இன்று நாம் அவரது இனிய தோழமையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.

ஆழத்திலிருந்து

பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறி ஏதும் தோன்றுகிறதாவென்று அறிய, நீச்சல் குளத்தின் நீர்ப்பரப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். நீச்சல் குளத்தில் உயிர்காப்புப் பணியாளராக அன்று, எனது ஆறு மணிநேர முறைமாற்று வேலையிலிருந்த நான், நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருப்பவர்களது பாதுகாவல் குறித்து கண்காணிப்பதற்காக குளத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். நான் நிற்கும் இடத்தைவிட்டு அகன்றாலோ அல்லது சற்று கவனக் குறைவாக இருந்தாலோ நீச்சல்குளத்திலிருப்பவர்களுக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுவிடும். காயத்தினாலோ அல்லது நீச்சல் திறமைக் குறைவினாலோ நீந்துபவர் நீரில் மூழ்கக்கூடிய ஆபத்திலிருந்தால், உடனே அவர்களை குளத்திலிருந்து தூக்கி பாதுகாப்பாக கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது எனது பொறுப்பாகும்.

பெலிஸ்தர்களுக்கு எதிரான யுத்தத்தில் (2 சாமு. 21:15-22) தேவன் தாவீதுக்கு உதவி செய்த அனுபவத்தை “ ஆழமான தண்ணீரிலிருந்து” (வச. 22:17) தூக்கி எடுக்கப்பட்ட அனுபவத்தோடு தாவீது ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தாவீதின் வாழ்க்கையும், அவனோடுகூட இருந்த மக்களின் வாழ்க்கையும், அவர்களது சத்துருக்களால் ஏற்பட்ட ஆபத்துக்களால் நிறைந்திருந்தது. அழிவுக்குள் மூழ்கின தாவீதை தேவன் தூக்கி எடுத்தார். உயிர்காப்பாளர்கள் நீந்துபவர்களுக்காக பாதுகாப்பு பணியில் உள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தேவனோ தாவீதின் மேலுள்ள பிரியத்தினால் (வச. 20) அவனைக் காப்பாற்றினார். தேவன் என்னை கண்காணித்து காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தினால் அல்லாமல் என்மேலுள்ள பிரியத்தினால், தேவன் என்னைக் காப்பாற்ற விரும்புவதை நான் உணரும் பொழுது, என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது.

நாம் நமது வாழ்க்கையின் போராட்டங்களினால் நாம் மேற்கொள்ளப்படும்பொழுது, நமது உயிர் காப்பாளரான தேவன் நமது போராட்டங்களை காண்கிறாரென்றும், நம்மேலுள்ள பிரியத்தினால் நம்மைக் கண்காணித்து காப்பாற்றுகிறார் என்ற நம்பிக்கையோடிருக்கலாம்.

நாம் திரும்ப கொண்டுவருவது என்ன?

நியுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு உலக நிகழ்ச்சிகளை சேகரிப்பதற்காக ஜான் F. பர்ன்ஸ் 40 ஆண்டுகளை செலவழித்தார். அவர் 2015ல் ஓய்வு பெற்றபின் எழுதின ஒரு கட்டுரையில் அவருடன் பணிபுரிந்த பத்திரிகையாளரும் புற்றுநோயினால் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவருமான அவரது நெருங்கிய நண்பரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து எழுதினார். “நீ எவ்வளவு தூரம் பயணம் செய்தாய் என்பது முக்கியமல்ல, ஆனால் நீ திரும்பி வரும்பொழுது என்ன கொண்டு வந்தாய் என்பதே முக்கியம் என்பதை மறந்துவிடாதே” என்று அந்த நண்பர் கூறினார்.

மேய்ப்பனாக இருந்த தாவீது போர் வீரனாக மாறி, இறுதியில் ராஜாவாகவும் ஆன அவனது வாழ்க்கைப் பயணத்தில், அவன் திரும்பிக் கொண்டு வந்தவைகள் அட்டவணையாக சங்கீதம் 37 இருக்கலாம். அந்த சங்கீதத்தில் நீதிமானுக்கும், பொல்லாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை செய்யுள் வடிவத்தில் கூறுவதோடு, கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ அவரது கிருபை நிச்சயம் என்பதை உறுதிப்படுத்துகிறது. பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல் அடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும் பூண்டைப்போல் வாடிப் போவார்கள்” (வச. 1-2).

“நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்” (வச. 23,24).

“நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை” (வச. 25).

வாழ்க்கையில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களின்மூலம், தேவன் நமக்கு கற்றுக்கொடுத்தது என்ன? அவருடைய உண்மைத் தன்மையையும், அன்பையும் எவ்வாறு நாம் அனுபவித்துள்ளோம்?  நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் மூலம், தேவன் நமக்கு கற்றுக்கொடுத்தது என்ன?  எந்த வகைகளில் தேவனுடைய அன்பு நமது வாழ்க்கையை உருவாக்கியுள்ளது?

நமது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கடந்து வந்தோம் என்பது முக்கியமல்ல! நாம் திரும்ப கொண்டு வந்தது என்ன என்பதுதான் முக்கியமாகும்.

சமுதாயத்தைக் கட்டுதல்

நீங்கள் இணைந்து வாழ விரும்பாத ஒரு நபரோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலைதான் “சமுதாயம்” என்று ஹென்ரி நவ்வென் கூறுகிறார். பொதுவாக நாம் நமக்குப் பிடித்தமான மக்கள் மத்தியில்தான் வாழ விரும்புகிறோம். அது சமுதாயமல்ல; அது ஒரு பொழுதுபோக்கு குழுவாக இருக்கலாம். அல்லது பிறருடன் சேர விரும்பாத சுயநலக் குழுவாக இருக்கலாம். ஒரு பொழுதுபோக்குக் குழுவை யார் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமுதாயத்தை உருவாக்க சிறந்த பண்பும், ஒருவரோடொருவர் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் தன்மையும், கடின உழைப்பும் தேவையாக உள்ளன.

சரித்திரத்திலேயே பலதரப்பட்ட மக்களை முதன் முதலாக ஒன்றாக இணைத்த நிறுவனம் கிறிஸ்தவ திருச்சபையாகும். ஆதித்திருச்சபையில் யூதர்களும், புறஜாதிகளும், ஆண்களும், பெண்களும்; அடிமைகளும், சுயாதீனர்களும் ஒரே சமமான நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதைக் குறித்துப் பவுல் “தேவனுக்குள்ளே ஆதி காலமுதல் மறைந்திருந்த இரகசியம்” என்று வெகு தெளிவாக விளக்கியுள்ளார். திருச்சபையில் பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்த்து ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம், உலகத்தையும் உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் ஈர்க்கத்தக்கதான சந்தர்ப்பம் கிடைக்கிறது என்று பவுல் கூறியுள்ளார் (எபே. 3:9-10).

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இன்றயத் திருச்சபை இச்செயலை செய்ய தவறிவிட்டது. ஆனாலும், நான் செல்லும் பல இடங்களில் திருச்சபையானது பல தலைமுறைகளை ஒன்றாக இணைக்கும் இடமாக உள்ளது. குழந்தைகளைக் கரங்களில் ஏந்தியுள்ள தாய்மார்கள், வேண்டாத நேரங்களில் புழுப்போல நெளிந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கும் சிறார்கள், எல்லா நேரங்களிலும் பொறுப்போடு நடக்கக்கூடிய பெரியவர்கள், போதகரது பிரசங்கம் நீண்டதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்தால் உறக்கத்தில் ஆழ்ந்துபோகும் மக்கள் என்ற பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கியதுதான் திருச்சபை.

தேவன் நமக்கு அருளுகிற சமுதாய அனுபவத்தை நாம் பெற விரும்பினால், “நம்முடைய தரத்திற்கு ஒத்துவராத மக்களையும்”, நமது திருச்சபையிலே அங்கத்தினர்களாக சேர்த்துக்கொள்ளும் மனமுடையவர்களாக இருக்க வேண்டும்.